THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

9 Nov 2016

TET 82 marks judgement copy

TESTF 82 marks judgement copy

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5UEFyUVFuOTZaazQ/view?usp=drivesdk

வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது, சனி மற்றும் ஞாயிறு செயல்படும் என அறிவிப்பு




புதுடெல்லி, வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மாற்றாக மத்திய அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. இப்பணியினை விரைவில் நடைமுறைப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் விதமாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவித்து உள்ள ரிசர்வ் வங்கி, சனி மற்றும் ஞாயிறு வங்கிகள் செயல்படும் என்று அறிவித்து  உள்ளது. 2-வது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

6 Nov 2016

Periyar books

http://www.testftirupurnorth.blogspot.com பெரியாரின் புத்தகங்கள் - மின்னூல் வடிவில்

அழியட்டும் "ஆண்மை" --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/2.pdf
அழிவு வேலைக்காரன் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/3.pdf
ஆத்மா, மோட்சம் - நரகம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/5.pdf
இந்து மதப் பண்டிகைகள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/10.pdf
இயற்கையும், மாறுதலும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/11.pdf
இராமாயணக் குறிப்புகள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/13.pdf
இனிவரும் உலகம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/15.pdf
உயர் எண்ணங்கள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/16.pdf
கிராமங்கள் ஒழிய வேண்டும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/20.pdf
சித்திரபுத்திரன் விவாதங்கள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/22.pdf
சிந்தனையும் பகுத்தறிவும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/23.pdf
சுதந்திரத் தமிழ்நாடே எனது லட்சியம் -- > http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/25.pdf
இலங்கைப் பேருரை --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/28.pdf
தமிழர்கள் இந்துக்களா ? --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/33.pdf
தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம்: பெரியாரும் ம.பொ.சி.யும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/31.pdf
திராவிடர் - ஆரியர் உண்மை --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/36.pdf
திராவிடர் திருமணம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/38.pdf
தேவதாசி ஒழிப்புச் சட்டம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/39.pdf
பறையன் பட்டம் போகாமல் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/43.pdf
பிள்ளையாரை உடைப்போம் ! --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/46.pdf
புத்தர் விழா --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/48.pdf
புராணங்களை எரிக்க வேண்டும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/50.pdf
பெண் விடுதலைச் சட்டங்களும் பார்ப்பனர்களும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/51.pdf
பெரியாரின் தன் வரலாறு --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/57.pdf
பொதுத் தொண்டு --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/59.pdf
பொதுவுடைமை சமதர்மம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/60.pdf
மனு சாஸ்த்திரத்தை எரிக்க வேண்டும். ஏன் ? --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/66.pdf
மனு நீதி: ஜாதிக்கொரு நீதி --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/68.pdf
ரஷ்யாவின் வெற்றி --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/69.pdf
ஜனநாயகத்தின் முட்டாள்த்தனம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/73.pdf

3 Nov 2016

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : அறிக்கை தர அரசுக்கு உத்தரவு


'அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்த மனு: 'தமிழகத்தில், 5,720 பள்ளி களில் கழிப்பறை வசதி இல்லை' என, 2014 ஆக., 8 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
நீதிபதிகள், 'அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும். பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கை, நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, 2014ல் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை நேற்று, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு விசாரித்தது. மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வழக்கறிஞர் கமிஷனர்கள் குழுவினர் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். இதில், கழிப்பறைகள், தண்ணீர் வசதி, துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லை. கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. 


சில பள்ளி களில் மின் கட்டணத்தை ஆசிரியர்கள் சொந்த பணத்திலிருந்து செலுத்துகின்றனர். அதை கல்வித்துறையே ஏற்று, மின்வாரியத்திற்கு செலுத்தலாம். நாப்கின் வசதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: பல்வேறு குறைபாடுகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூன்று மாவட்ட பள்ளிகளிலேயே இந்நிலை எனில், மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை பற்றி உங்களுக்கே தெரியும். 


வழக்கறிஞர் கமிஷனர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை செயலர் நவ., 8ல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினர்

பள்ளிகளில் 'ஆதார்' பதிவு: நவ.,15ல் மீண்டும் துவக்கம்*



அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி, நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது.
இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவு பணிகளை, அக்டோபர் முதல், மாநில அரசு ஏற்றுள்ளது. அதனால், செப்டம்பர் வரை, ஆதார் பதிவு பணிகளை மேற்கொண்ட, மத்திய அரசின், 'பெல்' நிறுவனம் விலகியது.


இதனால், அரசுப் பள்ளிகளில் நடந்து வந்த மாணவ, மாணவியருக்கான, ஆதார் பதிவு பணிகள் நின்று போயின. அப்பணிகளை மீண்டும் தொடரும்படி, பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு, ஆதார் விபரம் பதிவு செய்யாத மற்றும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது.


தற்போது, பல சிக்கல்களுக்கு பின், பொது மக்களுக்கான ஆதார் பதிவு பணிகளை, முழு வீச்சில் துவங்கி விட்டோம். பள்ளிகளில், ஆதார் பணிகளை, நவ., 15ல் துவங்கவுள்ளோம்; பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்; இப்பணியில், 500 பேர் ஈடுபடுவர்.


பொதுவாக, அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் தான், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளுக்காக, மனு செய்கின்றனர். அதனால் தான், அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, ஆதார் பதிவு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

10th standard way to success tamil guide a

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5MV9ELWJNMzIxWGc/view?usp=drivesdk

2 Nov 2016

இல்லந்தோறும் இணையம் திட்டம்:

இல்லந்தோறும் இணையம் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
"இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விவரம்:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள இணைய சேவை உரிமத்தை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் -சிறப்பான சேவையின் காரணமாக இந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பத்தை நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tactv.in)   இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15, மாலை 3 மணி.