THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

4 Dec 2016

இந்திய மாணவிக்கு அமைதி விருது





 

துபாய்: சர்வதேச அமைதி விருது, வெளிநாட்டு வாழ் இந்திய மாணவிக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி கேஹ்காசன் பாசு. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர். 'கிரீன் ஹோப்' என்ற பசுமை அமைப்பை நிறுவி, இயற்கை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறார். இதில் 1000 தன்னார்வலர்கள் பணிபுரிகின்றனர். 10 நாடுகளில் இவரது அமைப்பு செயல்படுகிறது. இளம் வயதிலேயே இவர் ஆற்றிய பணிகளை பாராட்டி, நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடந்த விழாவில் 2016ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருது நேற்று இவருக்கு வழங்கப்பட்டது. இதனை வங்கதேசத்தை சேர்ந்த நோபல் அமைதி பரிசு பெற்ற முகமது யூனிஸ் வழங்கினார்.

பாசுவின் பெற்றோர் கோல்கட்டாவைச் சேர்ந்தவர்கள். இவர் 12 வயதிலேயே 'கிரீன் ஹோப்' அமைப்பை தொடங்கினார். அடுத்த 4 ஆண்டுகளில் கொலம்பியா, பிரான்ஸ், மெக்சிகோ, நேபாளம், ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 5000 மரங்களை நட்டுள்ளார். இது தவிர யு.ஏ.இ., யில் பல்வேறு இயற்கை தொடர்பான பணிகளை செய்துள்ளார்.

சர்வதேச குழந்தைகள் அமைதி விருது 2005ம் ஆண்டு, நெதர்லாந்தில் தொடங்கப்பட்டது. உலகளவில் குழந்தைகளின் அரிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுடன் 72 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. முதல் விருது எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய தென் ஆப்ரிக்க மாணவர் நிகோசி ஜான்சனுக்கு வழங்கப்பட்டது. 2013ல் பாக்., சிறுமி மலாலாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கும், நோபல் அமைதி பரிசுக்கும் தொடர்பில்லை.

No comments:

Post a Comment