THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

21 Jul 2017

Pandian nagar school

*பறவைகள் பற்றிய சிறப்பு கருத்தரங்கம்*

எமது திருப்பூர் *பாண்டியன் நகர் ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில்* கடந்த 18.7.2017 மாலை 2 மணியளவில் எம்பள்ளிக்கு *திருப்பூர் இயற்க்கை கழகத்திலிருந்து திரு.Rtn.PHF.ரவீந்திரன்* அவர்களும் அவரது நண்பரும் இணைந்து எமது பள்ளி  *5ம் வகுப்பு* குழந்தைகளுக்கு பறவைகள் பற்றி எடுத்து கூறி அதன் முக்கியத்துவத்தையும் கூறினார்கள்.

சுமார் *50 க்கும் மேற்பட்ட பறவைகளின் தமிழ் பெயர்களை* கூறினார். மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக கேட்டறிந்தனர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் பள்ளியின் சார்பாக அவர்களுக்கு  நன்றிகள்.


20 Jul 2017

CRC அளவிலான விளையாட்டு போட்டிகளில் விளையாடிய மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா. 15 வேலம்பாளையம்

CRC  அளவிலான விளையாட்டு போட்டிகளில் விளையாடிய மாணவ மாணவிகளுக்கான    பரிசளிப்பு விழா. 15 வேலம்பாளையம்

18 Jul 2017

திருப்பூர் வடக்கு *பாண்டியன் நகர்* ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி *அக்ஷயதர்ஷினி* தற்போது 45 நாடுகளின் கொடிகளை *அடையாளம் கண்டு அந்நாட்டின் பெயர்களை கூறுகிறாள்*. இடையிடையே கொடியை காண்பித்து கேட்டாலும் சரியா அடையலாம் கண்டு சொல்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்.

திருப்பூர் வடக்கு  *பாண்டியன் நகர்* ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி *அக்ஷயதர்ஷினி* தற்போது 45 நாடுகளின் கொடிகளை *அடையாளம் கண்டு அந்நாட்டின்  பெயர்களை கூறுகிறாள்*.

  இடையிடையே  கொடியை காண்பித்து கேட்டாலும் சரியா அடையலாம் கண்டு சொல்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்.Click here for the video

15 Jul 2017

ஊ.ஒ.தொ பள்ளி கவிதாலட்சுமிநகர் பள்ளியின் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டங்கள்

ஊ.ஒ.தொ பள்ளி கவிதாலட்சுமிநகர் பள்ளியின் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டங்கள்









9 Jul 2017

ஆசிரியர், மாணவர் எண்ணிக்கையில் குளறுபடி - 'பயோ மெட்ரிக்' திட்டம் விரைவில் அமல்


தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறை அமலாக உள்ளது. இதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிப்பு துவங்கி உள்ளது.

தமிழகத்திலஅரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவானது, தனியாக பதிவேட்டில் குறித்து வைக்கப்படுகிறது. இதில், பல முறைகேடுகள் நடப்பதாக, தொடர்ந்து புகார்கள் உள்ளன. அரசு உதவிகள் பெறும் வகையிலும், ஆசிரியர்கள் எண்ணிக்கையை தக்க வைக்கவும், அரசின் இலவச திட்டப் பொருட்களை பெறவும், கூடுதல் மாணவர்கள் உள்ளதாக, கணக்கு காட்டப்படுவதாக கூறப்படுகிறது.

'ஓபி'அதே போல, பல பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கே வராமல், வந்ததாக கணக்கு காட்டுவதாகவும், சில ஆசிரியர்கள் சங்கங்களின் பொறுப்புகளில் உள்ளோர், பணிக்கு வராமல், 'ஓபி' அடிப்பதாகவும், அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவில் முறைகேட்டை தடுக்க, 'பயோ மெட்ரிக்' முறை கொண்டு வர,பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டது. ஆனாலும், இத்திட்டம் பல காரணங்களால், அமலுக்கு வராமல் இழுபறியாகி உள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்கள் அதிகமாக, 'ஓபி' அடிக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில், முதற்கட்டமாக, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கணினியில் பதிவுஇதற்காக, பள்ளிகள் வாரியாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முழு விபரங்களை, தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப, இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.இந்த விபரங்களை கணினியில் பதிவு செய்யவும், ஆக., மாதத்திற்குப் பின், 'பயோ மெட்ரிக்' முறையை, முழு வீச்சில் அமல்படுத்தவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.