THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

28 Nov 2015

கணிதத்திறன் போட்டி டிச., 20க்கு மாற்றம்


தமிழக அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு, கணிதத்திறன் தேர்வு நடத்தப்படும். 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான தேர்வு, நவ., 22ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது; கன மழையின் காரணமாக,நவ., 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளதால், இத்தேர்வு, டிச., 20ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் அறிவித்துள்ளார். தேதி மாற்றப்பட்டுள்ளதால், விருப்பமுள்ள மாணவர்கள், டிச., 17 வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம் எனவும், அவகாசம் அளிக்கப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment