THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

21 Jul 2017

Pandian nagar school

*பறவைகள் பற்றிய சிறப்பு கருத்தரங்கம்*

எமது திருப்பூர் *பாண்டியன் நகர் ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில்* கடந்த 18.7.2017 மாலை 2 மணியளவில் எம்பள்ளிக்கு *திருப்பூர் இயற்க்கை கழகத்திலிருந்து திரு.Rtn.PHF.ரவீந்திரன்* அவர்களும் அவரது நண்பரும் இணைந்து எமது பள்ளி  *5ம் வகுப்பு* குழந்தைகளுக்கு பறவைகள் பற்றி எடுத்து கூறி அதன் முக்கியத்துவத்தையும் கூறினார்கள்.

சுமார் *50 க்கும் மேற்பட்ட பறவைகளின் தமிழ் பெயர்களை* கூறினார். மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக கேட்டறிந்தனர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் பள்ளியின் சார்பாக அவர்களுக்கு  நன்றிகள்.


20 Jul 2017

CRC அளவிலான விளையாட்டு போட்டிகளில் விளையாடிய மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா. 15 வேலம்பாளையம்

CRC  அளவிலான விளையாட்டு போட்டிகளில் விளையாடிய மாணவ மாணவிகளுக்கான    பரிசளிப்பு விழா. 15 வேலம்பாளையம்

18 Jul 2017

திருப்பூர் வடக்கு *பாண்டியன் நகர்* ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி *அக்ஷயதர்ஷினி* தற்போது 45 நாடுகளின் கொடிகளை *அடையாளம் கண்டு அந்நாட்டின் பெயர்களை கூறுகிறாள்*. இடையிடையே கொடியை காண்பித்து கேட்டாலும் சரியா அடையலாம் கண்டு சொல்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்.

திருப்பூர் வடக்கு  *பாண்டியன் நகர்* ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி *அக்ஷயதர்ஷினி* தற்போது 45 நாடுகளின் கொடிகளை *அடையாளம் கண்டு அந்நாட்டின்  பெயர்களை கூறுகிறாள்*.

  இடையிடையே  கொடியை காண்பித்து கேட்டாலும் சரியா அடையலாம் கண்டு சொல்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்.Click here for the video

15 Jul 2017

ஊ.ஒ.தொ பள்ளி கவிதாலட்சுமிநகர் பள்ளியின் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டங்கள்

ஊ.ஒ.தொ பள்ளி கவிதாலட்சுமிநகர் பள்ளியின் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டங்கள்









9 Jul 2017

ஆசிரியர், மாணவர் எண்ணிக்கையில் குளறுபடி - 'பயோ மெட்ரிக்' திட்டம் விரைவில் அமல்


தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறை அமலாக உள்ளது. இதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிப்பு துவங்கி உள்ளது.

தமிழகத்திலஅரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவானது, தனியாக பதிவேட்டில் குறித்து வைக்கப்படுகிறது. இதில், பல முறைகேடுகள் நடப்பதாக, தொடர்ந்து புகார்கள் உள்ளன. அரசு உதவிகள் பெறும் வகையிலும், ஆசிரியர்கள் எண்ணிக்கையை தக்க வைக்கவும், அரசின் இலவச திட்டப் பொருட்களை பெறவும், கூடுதல் மாணவர்கள் உள்ளதாக, கணக்கு காட்டப்படுவதாக கூறப்படுகிறது.

'ஓபி'அதே போல, பல பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கே வராமல், வந்ததாக கணக்கு காட்டுவதாகவும், சில ஆசிரியர்கள் சங்கங்களின் பொறுப்புகளில் உள்ளோர், பணிக்கு வராமல், 'ஓபி' அடிப்பதாகவும், அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவில் முறைகேட்டை தடுக்க, 'பயோ மெட்ரிக்' முறை கொண்டு வர,பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டது. ஆனாலும், இத்திட்டம் பல காரணங்களால், அமலுக்கு வராமல் இழுபறியாகி உள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்கள் அதிகமாக, 'ஓபி' அடிக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில், முதற்கட்டமாக, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கணினியில் பதிவுஇதற்காக, பள்ளிகள் வாரியாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முழு விபரங்களை, தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப, இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.இந்த விபரங்களை கணினியில் பதிவு செய்யவும், ஆக., மாதத்திற்குப் பின், 'பயோ மெட்ரிக்' முறையை, முழு வீச்சில் அமல்படுத்தவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

28 Feb 2017

Bank strike Today 28.02.2017

http://www.testftirupurnorth.blogspot.com
வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் இன்று(பிப்.,28), 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுகின்றனர்; அதனால், வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கும்.

வாரத்தில் ஐந்து நாள் வேலை, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, வேலை செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, அப்போது உயிர் இழந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் உட்பட, பல கோரிக்கைகளை, வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.

பேச்சு தோல்வி:

இது தொடர்பாக, மத்திய அரசுடன் நடந்த பேச்சு தோல்வி அடைந்ததால், கூட்டமைப்பினர் இன்று(பிப்.,28) ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொது மற்றும் அரசுத் துறை வங்கிகள்; கூட்டுறவு வங்கிகள்; பழைய தனியார் வங்கிகள்; வெளிநாட்டு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

கோரிக்கைகள்:

இது குறித்து, இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர், சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது: அரசு வங்கிகளின் பல பணிகளை, தனியாருக்கு தரவும், பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், வங்கிகளை தனியார் மயமாக்கவும், மத்திய அரசு முயற்சித்து வருகிறது; இவற்றை கைவிட வேண்டும். ஓய்வூதிய பலன்களை அதிகரிக்க வேண்டும்; பல ஆயிரம் கோடி வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடக்கிறது.

இதில், தமிழகத்தில், 8 000 கிளைகளில் பணிபுரியும், 75 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். சென்னையில், வள்ளுவர் கோட்டத்திலும், மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

சில வங்கிகள் செயல்படும் :

பழைய தனியார் வங்கிகளின் ஊழியர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர். அதே நேரம், புதிய தனியார் வங்கிகளான, எச்.டி.எப்.சி., - ஐ.சி.ஐ.சி.ஐ., - கோட்டக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. இந்த வங்கிகள், வழக்கம் போல செயல்படும். மற்ற வங்கிகள் செயல்படாததால், வங்கிகளுக்கு இடையே நடைபெறும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும்.

7 Jan 2017

ATM -ல் பணமெடுக்கும் முன் சிந்தியுங்கள்!


ஏடிஎம்களில் பணம் எடுக்கும் முன்பு, இது இந்த மாதத்தில் எத்தனையாவது முறை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏன் என்றால், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 1ம் தேதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்து விட்டது.
அதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளில் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு 2500 ரூபாய் (தற்போது இது 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது) மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அதே சமயம், பொது மக்களின் நலனுக்காக, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த தளர்வு, டிசம்பர் 31ம் தேதியோடு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, ஜனவரி 1ம் தேதியில் இருந்து கணக்கு வைத்துள்ள வங்கியன் ஏடிஎம்கள் மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்மில் 3 முறையும் மடடுமே பணம் எடுக்கலாம்.
அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். எனவே, அதிக அளவில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பவர்கள், டிஜிட்டல் முறையில் பணப்பரிமற்றம் செய்யவும், மின்சார கட்டணம், எல்பிஜி சிலிண்டருக்கான் கட்டணங்களை இணையதளம் வாயிலாகக் கட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அல்லது, நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று பணம் எடுப்பதுவும் சிறந்தது.

DEE - TEACHERS SERVICE RECORD ENTRY REG PROCEEDING... தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் - ஆசிரியர்களின் ஊதியம், இதர பணபலன்கள் மற்றும் பணிப்பதிவேடு உள்ளிட்ட அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் உத்தரவு...



அதிகாலை படித்தால் என்னவெல்லாம் பலன்?!


அதிகாலை என்பது, குழந்தைகள் படிப்பதற்கு மிகச்சிறந்த நேரம். அந்நேரம் படிப்பதால் பாடங்களை எளிதில் குழந்தைகளால் உள்வாங்கிக்கொள்ள முடியும்'' எனக் கூறும் கிராமியக் கலை பயிற்சியாளரான மாதேஸ்வரன், அதற்கான காரணங்களை விளக்குகிறார்.


''பள்ளி, ட்யூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் என காலையில் இருந்து அடுத்தடுத்த கல்வி நேரத்தை கடந்துவந்து சோர்வான, இறுக்கமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளால் மாலை மற்றும் இரவு நேரத்தில் சரியாக படிக்க முடியாது. அதனால் மாலை நேரங்களில் எழுத்து வேலைகள் இருந்தால் அப்போது அதனை குழந்தைகளைச் செய்யவைக்கலாம். பின்னர், அவர்களின் உடம்புக்கு ஓய்வு தேவைப்படும். அதுதான், உயர்ந்த தியான நிலையான தூக்கம்.

தூங்கி எழுந்ததும், குழந்தைகளின் மனமும் உடலும் நல்ல புத்துணர்ச்சியுடன் இயங்கும். அப்போது மூளையும் முழுமையான, புத்துணர்வான ஆற்றலுடன் இயங்க ஆரம்பிக்கும். முந்தைய நாள் பிரச்னைகள், கவலைகள் மறந்துபோயிருக்கும். புதிய எண்ண ஓட்டங்கள் தொடங்கும் அந்த வேளையில் படிக்கும் பாடங்கள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். நினைவில் நிற்கும்.

இரவில் குழந்தைகள் விரைவாக தூங்கச் செல்லும்போது, காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவார்கள். அப்படி எழுந்து காலையில் 5 - 7.30 மணி வரை அவர்கள் படிப்பது மிகுந்த பலன் தரும். அப்படிப் படிக்கும்போது அறைக்குள், வீட்டுக்குள் முடங்கிப் படிப்பதைவிட, கிராமப்புற மாணவர்கள் வீட்டுத் திண்ணையிலும், நகர்ப்புற மாணவர்கள் பால்கனி, மொட்டைமாடியிலும் என, வெளிக்காற்று ஸ்பரிசம் பெற்றுக்கொண்டே படிக்கும்போது கிடைக்கும் புத்துணர்வு, பாடங்களை விரைவில் மனனம் செய்யவைக்கும். கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதிகாலையில் நல்ல ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘அறிவுக்கு மேற்கு, வெளிச்சத்துக்கு கிழக்கு, பயணத்துக்கு வடக்கு, முடிவுக்கு தெற்கு’ எனச் சொல்வார்கள். அதன்படி பார்க்கும்போது, மேற்கு திசை நோக்கி அமர்ந்து படிப்பது, நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். கவனச்சிதறல் இன்றி படிக்க முடியும். இன்றைக்கும் கிராமப்புறப் பகுதி பாடசாலைகளில் ஆசிரியர் கிழக்கு நோக்கி அமர்ந்தும், மாணவர்கள் மேற்கு நோக்கி அமர்ந்தும்தான் படிப்பார்கள்'' என்கிறார் மாதேஸ்வரன்.

''10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 8 - 10 மணிநேரம் தூங்க வேண்டும். அவர்கள் அதிகாலை 5.30 - 6 மணிபோல எழுந்து, அதன் பின்னர் படிப்பதே சிறந்தது. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 4.30 - 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் எழுந்து படிக்கலாம்'' எனக் கூறும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், காலை நேரம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறார்.

''அதிகாலை நேரம் இரைச்சல், ஆள் நடமாட்டம் என எந்தவித வெளிப்புற தொந்தரவும் இன்றி சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும். குழந்தைகளுக்கு முந்தைய நாள் நினைவுகள் மறந்து, உடல் உறுப்புகள் புத்துணர்ச்சியுடன் வேலைகளைத் தொடங்கும். மூளை வேகமாக இயங்கும். மேலும் அதிகாலை நேரம் ஆக்ஸிடோசின் (Oxytocin), சிரோடோனின் (Serotonin), டோபமைன் (Dopamine) உள்ளிட்ட பயனுள்ள ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்வதுடன்,

நல்ல மன அமைதியையும், நல்ல நினைவாற்றலையும் கொடுக்கும். அதனால் அதிகாலை நேரம் படிப்பதால், மிகுந்த பலன் கிடைக்கும்.

அதிகாலை நேரம் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, ஜுஸ், பால், சத்துமாவு கஞ்சி என ஏதாவது ஒரு திரவ உணவு சாப்பிட்டுவிட்டு படிக்க அமரலாம்'' என்றார் டாக்டர்.