THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

30 Dec 2015

வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர் தானாக நீக்கப்படும்:



நாடு முழுவதும் விரைவில் புதிய திட்டம் அறிமுகம்
உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து தானாகவே நீக்கப்படும் திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல் படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்தார்.

இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்களை பயன்படுத்தி முறை கேடுகள் நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அதன்படி வாக்காளர் பட்டியலுடன் அந்தந்த மாவட்ட பிறப்பு, இறப்பு விவரங்கள் அடங்கிய கணினி சர்வர் இணைக் கப்படும். அதன்மூலம் உயிரிழந்த வாக்காளர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து தானாக நீக்கப்படும்.

இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், தார்ன் தாரண் ஆகிய மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

எனினும் இதில் சில புகார்கள் எழக்கூடும் என்பதால், உயிரிழந் ததாக கண்டறியப்படும் வாக்கா ளரின் முகவரிக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் முறைப்படி நோட்டீஸ் அனுப்புவார். குறிப்பிட்ட காலத்தில் நேட்டீஸுக்கு பதில் அளிக்கப்படாவிட்டால் அந்த வாக்காளரின் பெயர் பட்டியல் இருந்து நீக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பதவி உயர்வு










இன்று திருப்பூர் வடக்கு பள்ளியில் பணிபுரியும்  💐 பிரவீன் குமார் வாவிபாளையம் பள்ளியிலிருந்து வள்ளிபுரம் பள்ளிக் கும்
💐  சோபியா ஹேனல் சிங்   சமத்துவபுரம் பள்ளியிலிருந்து கேத்தம்பாளையம் பள்ளிக்கும் பட்டதாரி (ஆங்கிலம்) ஆசிரியரியராக பதவி உயர்வு பெற்றதற்கு எங்களது வாழ்த்துக்கள்.

TESTF
TIRUPUR NORTH.

28 Dec 2015

நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!

நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!

1. காற்புள்ளி (,)
2. அரைப்புள்ளி( ; )
3. முக்காற்புள்ளி (:)
4. முற்றுப்புள்ளி ( . )
5. வினாக்குறி (?)
6. உணர்ச்சிக்குறி (!)
7. இடையீட்டுக்குறி ( – )
8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () )
9. ஒற்றை மேற்கோள்குறி (' ')
10.இரட்டை மேற்கோள்குறி (" ")
11. விழுக்காடு குறி (%)
12. விண்மீன் குறி (*)
13. வலம் சாய்க்கோடு (/)
14. இடம் சாய்க்கோடு (\) 15.கொத்துக்குறி(#)
16. தொப்பிக்குறி(^)
👇🏻
📚 காற்புள்ளி
1)           பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர்.
ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன்.
இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.
2)           விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம்
ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக.

3) வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கத்தைக் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
அ) கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘ உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.
ஆ) ஒருவன் நன்றாகப் படித்து முடித்தபின், பரீட்சைக்குப் பயப்படமாட்டான்.
4) இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.
அ) மேலோர் கீழோர், அரசன் ஆண்டி என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.
5) ஆனால்,ஆயின், ஆகையால், எனவே,  போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி அவசியம்.
அ) கந்தன் மிக நல்லவன் ; ஆனால் , அவன் படிப்பில் குறைந்தவன்.
ஆ) வள்ளுவர் மிகச் சிறந்த ஞானியே; ஆனால் அவர் தம்மை உலகிற்கு அறிவிக்காமல் போனது பெருங்குறையே.
இ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து; ஆகையால், சிறுவயது தொட்டே சிரத்தையுடன் கல்விகற்கவேண்டும்.

🔹அரைப்புள்ளி

1) பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
அ) கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள் ;  மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.
ஆ) பண்டை இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தனவே; ஆனால், அவை எளிய நடையில் அமைந்தன என்று கூறல் இயலாது.

🔹முக்காற் புள்ளி

1)சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
அ) பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன.
ஆ) பொருள் கூறுக: கோன், மஞ்சு, குஞ்சரம்.
இ) முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

🔹முற்றுப்புள்ளி

1)சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்பெறல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
அ) அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.
ஆ) நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
2) சொற்குறுக்கத்தையும் (திரு.) பெயர்க்குறுக்கத்தையும் (ம.ப.பா.) அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
வினாக்குறி
வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.

🔹உணர்ச்சிக்குறி

1)மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
அ) போட்டியில்  எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)
ஆ) எனது உறவினர் ஒருவருடன் இப்பொழுததான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டதே! (வியப்பு)
இ) கொடியவன் ! கொடியவன் ! (அச்சம்)
இடையீட்டுக் குறி     (          )      ]
ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், இவ்வாறு சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
அ) திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.
ஆ) சிற்றம்பலத்திற்கு இன்றோடு பன்னிரண்டு அகவை (ஆண்டு) நிறைவுற்றது.
இ) இயற்கைப் பண்பாட்டோடு வாழ்கின்றவர், உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் ஒழுக்கத்தினின்று தவறமாட்டார்.
பிறைக்குறி
மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
அ) பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.
இரட்டை மேற்கோள் குறி
பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும்போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.
ஒற்றை மேற்கோள் குறி
இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
(அ)  ‘அ, இ, உ’    –  இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

24 Dec 2015

NMMS ANDRIOD APP

NMMSstudymaterials ANDRIOD APP

This is the No.1 App For NMMS Exam Study Material
* Study Materials
* Question Papers
* Key Answers Available
- Also Rural Talent Exam Study Materials, NTSE Scholarship Exam Study Materials Available

22 Dec 2015

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு


திருவள்ளுவர் சிலை என்பது
திருக்குறள் எழுதிய
திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990 ,
செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000 ,
சனவரி 1 இல் திறக்கப்பட்டது.
சிலை அமைப்பு
திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது . கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
சிலை குறிப்புகள்
1. மொத்த சிலையின் உயரம் - 133 அடி
2. சிலையின் உயரம் - 95 அடி
3. பீடத்தின் உயரம் - 38 அடி
4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
5. சிலையின் மொத்த எடை - 7,000 டன்
6. சிலையின் எடை - 2,500 டன்
7. பீடத்தின் எடை - 1,500 டன்
8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
சிலை அளவுகள்
1. முக உயரம் - 10 அடி
2. கொண்டை - 3 அடி
3. முகத்தின் நீளம் - 3 அடி
4. தோள்பட்டை அகலம் -30 அடி
5. கைத்தலம் - 10 அடி
6. உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
7. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
8. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி



கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை: கருணாநிதி திறந்து வைத்தார்

இருபதாம் நூற்றாண்டு முடிந்து 21 ம் நூற்றாண்டு பிறந்த வேளையில், குமரிமுனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

குமரிமுனையில் விவேகானந்தர் மண்டபத்தை அடுத்து, கடலில் உள்ள பாறையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.


31.12.1999 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. குறளோவியம் மற்றும் நூல் கண்காட்சிகளை சட்டப்பேரவைத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் திறந்து வைத்தார்.

அடுத்து, குழந்தைகள் திருக்குறள் ஒப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டரை வயது சிறுவன் ஒருவன் அகர முதல... என்று தொடங்கி, திருக்குறளை ஒப்பித்தது அரங்கத்தை கரவொலியால் கலகலக்கச் செய்தது.

திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்த 22 மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அனுப்பப்படும்.

இனியும் இப்படி சாதனை படைக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீடு தேடிப்போகும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

பின்னர் ஆய்வரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஜி.கே.மூப்பனார், வைகோ மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தாஜ்மஹாலைப்போல தஞ்சைக் கோவிலைப்போல இந்தத் திருவள்ளுவர் சிலையும், இதை அமைத்த கருணாநிதியும் நீடித்து நிற்பார்கள் என்று சிவாஜிகணேசன் கூறினார்.

புத்தாயிரம் ஆண்டின் தொடக்க நாள் 1.1.2000 காலை 7.30 மணிக்கு 1,330 இசைவாணர்கள் நாயன இசை முழங்க, இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின.

அன்றிரவு 7.30 மணிக்கு திருவள்ளுவர் சிலையை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அவர் ரிமோட்டில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும், 38 அடி உயர பீடத்தில் மின் விளக்குகள் பிரகாசித்தன.

95 அடி உயர சிலையின் கீழ்ப்பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீல வண்ண ஒளி படர்ந்தது.

பிறகு மற்றொரு பொத்தானை அழுத்தி, சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்.


சிலையை வடித்த கணபதி ஸ்தபதிக்கும், அவருடைய குழுவினருக்கும் கருணாநிதி பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கினார்.

கருணாநிதி பேசுகையில், திருவள்ளுவரை இனி கவிஞன் என்றோ, புலவன் என்றோ அழைக்காதீர்கள்.
தெய்வாம்சம் பொருந்திய அவரை அய்யன் என்றே அழையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.


விழாவில் பல்வேறு கட்சித்தலைவர்கள், புலவர்கள், கவிஞர்களுடன், வெளிநாடுகளில் இருந்து பல தமிழறிஞர்கள் வந்து கலந்து கொண்டனர்.


இந்தச் சிலை பற்றிய வரலாறு வருமாறு:-


தமிழ்நாடு அரசு சார்பில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று 1975 டிசம்பர் மாதம் முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் சில நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதால் அவரால் அத்திட்டத்தைத் தொடங்கமுடியவில்லை.


பின்னர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற எம்.ஜி.ஆர். கன்னியாகுமரியில் 40 அடி பீடத்தின் மீது 30 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

 சிலை அமைக்கும் பணியை எம்.ஜி.ஆர். முன்னிலையில் மொரார்ஜி தேசாய் தொடங்கி வைத்தார்.
1981 ல் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 45 அடி பீடத்தில் 75 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


1989 ல் மீண்டும் முதல்_அமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, கூடிய விரைவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்திற்காக 1990-91_ம் ஆண்டு பட்ஜெட்டிலும் பணம் ஒதுக்கினார்.



1990 செப்டம்பர் 6ந்தேதி திருவள்ளுவர் சிலை எழுப்பும் பணியை கருணாநிதி தானே உளியைக்கொண்டு செதுக்கி தொடங்கி வைத்தார்.


சிலை அமைக்கும் பணி, வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கிய கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் தலைமையில் 500 சிற்பிகள் கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சென்னையை அடுத்த சோழிங்க நல்லூர் ஆகிய 3 இடங்களில் சிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.


திருவள்ளுவர் சிலையை அமைப்பதால், கன்னியாகுமரியில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு (லைட் ஹவுஸ்) இடையூறு ஏற்படும் என்று கூறி, திருவள்ளுவர் சிலை அமைக்க 1994 ல் மத்திய அரசு தடை விதித்தது.


1996 ல் கருணாநிதி மீண்டும் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றபின், திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணிக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
சிலை அமைக்கும் வேலை இரவு பகலாக நடந்தது.


சிலை அமைக்கும் பணி விஜயதசமி நாளில் (19.11.1999) முடிவடைந்தது.
38 அடி பீடத்தில் 95 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, பீடத்தையும் சேர்த்து சிலையின் மொத்த உயரம் 133 அடி.
மொத்த எடை 7 ஆயிரம் டன்.
செதுக்கப்பட்ட 3,681 கற்களைக்கொண்டு, சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான மொத்த செலவு ரூ.10 கோடி.
இதில் 133 குறட்பாக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

19 Dec 2015

2016 PUBLIC HOLIDAYS LIST

2016 PUBLIC HOLIDAYS LIST

TNTET தேர்வு நடைபெறாததால் அல்லல்படும் ஆசிரியர்கள்!

TNTET தேர்வு நடைபெறாததால் அல்லல்படும் ஆசிரியர்கள்!

ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளால் பணி பாதுகாப்பு இல்லாமல் ( 23-08-2010 --- 15-11-2016 )சிக்கலில் தவித்துக் கொண்டுள்ள (பணியில் உள்ள) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு...


          தமிழகத்தில் 23-08-2010  க்குப் பிறகு ஆசிரியர் தகுதி தேர்வு இல்லாது பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையிலும்அரசு சிறுபான்மையினர் பள்ளிகள்உதவி பெறும் பள்ளிகளில் இதே பிரட்சனைகளில் மன உளைச்சலில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் நிலையை தமிழக அரசின் முழு கவனத்திற்கு எடுத்து செல்ல நாம் ஒன்று சேர வேண்டிய தருணம் இது.

       நாம் தமிழக அரசிடம் நம் நிலையை எடுத்துக் கூறி நம் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவில் சென்னையில் கூடி முடிவு செய்ய தற்போதைய நிலைப்படி சுமார் 300 ஆசிரியர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளனர். இன்னும் சுமார் 3000 பேர் தமிழகத்தில் இப்பிரட்சனையுடன் பணி புரிந்து வருகின்றனர் என்ற தரவு தற்போது கிடைத்துள்ளது.

         23-08-2010க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களே தயை கூர்ந்து இதுசார்ந்த தகவல்களுக்கு கீழ் வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
9962228284, 9655949077,  9524847173,  9843438004,  9791540176,

9488752473...9585667075

18 Dec 2015

12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.


11.01.2016-மொழிப்பாடம் I
12.01.2016 -மொழிப்பாடம் ll
13.01.2016-ஆங்கிலம் l
14.01.2016 -ஆங்கிலம் ll
18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல்
19.01.2016-கணிதம், நுண் அறிவியல்
21.01.2016-இயற்பியல்
23.01.2016-வேதியல்
25.01.2016-உயிரியல், தாவரவியல்
27.01.2016-கணினி அறிவியல்

15 Dec 2015

பள்ளிக்கல்வி - சுகாதார முன்னெச்சரிக்கைகள் - பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்!!

பள்ளிக்கல்வி - சுகாதார முன்னெச்சரிக்கைகள் - பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்!!

பள்ளிகள் அருகே பேல்பூரி கடைகளுக்கு தடை


சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அருகே பேல்பூரி உள்ளிட்ட சுகாதாரமற்ற கடைகளை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த கடைகள் இருந்தால், தலைமை ஆசிரியர் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த கடைகளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

14 Dec 2015

பரிதவிக்கும் மாணவர்கள்: கைகொடுக்கும் நண்பர் குழுவினர்


காரைக்குடி:வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்து நிற்கும் மாணவர்களுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர், காரைக்குடி பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள், அலுவலர்கள்,நண்பர்கள் குழுவினர்.

சென்னை,கடலுாரை புரட்டிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்,கரம் நீட்டும் முன்பே, கை கொடுத்து வருகின்றனர் காரைக்குடி தன்னார்வலர்கள். ஒவ்வொரு நாளும் லாரியில் எண்ணற்ற புத்தகங்கள், நோட்டுக்கள், துணி, உணவு, இதர பொருட்கள் என தங்களால் முடிந்தவற்றை அனுப்பி வருகின்றனர்.உணவு, உடைக்குரிய தட்டுப்பாடு நீங்கினாலும், பள்ளி திறக்கும் வேளையில், நோட்டு புத்தகங்களின் தேவை அவர்களை வாட்டி வதைக்கிறது. அந்நிலையை மாற்ற, நோட்டு, புத்தகம் தேவைப்படுவோருக்கு, ஒவ்வொரு நாளும் கூரியர் மூலம், காரைக்குடி பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அலுவலர்கள் அனுப்புகின்றனர்.

காரைக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி. இவரது மகள் சேதுராணி. சென்னையில் நிலத்தடி நீர் பிரிவில் பொறியாளராக உள்ளார். பிரசவத்துக்காக தந்தை வீட்டுக்கு வந்தார். சென்னை வெள்ளத்தை பார்த்து, கடந்த 7-ம் தேதி, தன்னால் இயன்ற உதவியை வழங்கலாம், என, 'வாட்ஸ் ஆப்' மூலம் புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவரது தந்தை எண் 94869 05884, கணவர் சரவணன் 81787 61625, அவரது சகோதரர் சேதுபதி 81486 89993 ஆகியோரின் எண்களை வழங்கியுள்ளார்.அன்று முதல் சென்னை, கடலுாரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு புத்தகங்களை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு கூரியரில் கடந்த 9-ம் தேதி முதல் புத்தகங்களை சுந்தரமூர்த்தி அவரது நண்பர்கள் அனுப்பி வருகின்றனர்.

சுந்தரமூர்த்தி கூறும்போது: எனது மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மூலம், நல்லது செய்ய வேண்டும் என கருதி, மற்றவர்களிடம் இது குறித்து கேட்டேன். உதவி செயற்பொறியாளர்கள் தாசூஸ், பொன்னன், பாண்டி, சங்கர், உதவியாளர் கோடை மலை, உதவி பொறியாளர் நவசக்தி, அஜீத்குமார், எனது மருமகன், மகன் உதவினர்.நடுத்தர, பின்தங்கிய ஏழைகளை தேர்வு செய்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகங்களை, அவர்களின் வீட்டு முகவரிக்கு தினந்தோறும் கூரியரில் அனுப்பி வருகிறோம். இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு அனுப்பியுள்ளோம். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று புத்தகங்களை சேகரித்து வருகிறோம். .

பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கிடைப்பது இல்லை. பள்ளிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம். அவர்கள் பழைய மாணவர்களிடமும், தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களையும் தருவதாக கூறியுள்ளனர்.வித்யாகிரி பள்ளி முதல்வர், அவர் கோடவுனை திறந்து உங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து கொள்ளுங்கள் எனக் கூறி, ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார். கூரியரில் புத்தகங்கள் கொண்ட பார்சலுக்கு ரூ.15 மட்டுமே பெற்று உதவியுள்ளனர். இதுவரை ரூ.1.5 லட்சம் வரையிலான புத்தகங்களை அனுப்பியுள்ளோம், என்றார்.

சென்னை குரோம்பேட்டை அமுதா: என் மகன்களுக்கு கூரியரில் புத்தகம் அனுப்பி வைத்தனர். வாழ்க்கையில் இது மறக்க முடியாது. என்றும் நாங்கள் அவர்களுக்கு கடமை பட்டுள்ளோம், என்றார்.

பாடம் நடத்தாத ஆசிரியர்கள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'

சரிவர பாடம் நடத்தாத ஆசிரியர்கள், ஏழு பேரிடம் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார்.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிக்கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது; 21 ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், ௧௦ம் வகுப்பில், 76 சதவீதம், பிளஸ் 2வில், 48 சதவீதம் மட்டுமே, மாணவர்களின் தேர்ச்சி இருந்தது; வேலுார் மாவட்டத்திலேயே மிகக் குறைந்த தேர்ச்சி, இந்தப் பள்ளியில் தான்.சமீபத்தில், இந்த பள்ளிக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, அந்த பள்ளியின், ஏழு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரிவர பாடங்களை நடத்தாதது தான், தோல்விக்கு காரணம் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறினர். இதையடுத்து, அந்த ஏழு ஆசிரியர்களுக்கும், 'சரி வர பாடம் நடத்தாதது ஏன்?' என கேட்டு, கல்வி அலுவலர், நோட்டீஸ் கொடுத்துள்ளார். பிற ஆசிரியர்களையும் கண்டித்த அலுவலர், 'வரும் பொதுத்தேர்வில், அதிக வெற்றி பெற பாடுபட வேண்டும்' என, அறிவுறுத்தினார்.

இன்னும் தண்ணீர் வடியாத 29 பள்ளிகளுக்கு விடுமுறை.

தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தண்ணீர் இன்னும் வடியாத நிலையில், சென்னையில் உள்ள 29 பள்ளிகளுக்கு  (டிச.14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள் விவரம்:


* வில்லிவாக்கம் சிட்கோநகர் அரசு மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலப் நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை, பஜார் சாலையில் உள்ள சென்னை தொடக்க பள்ளிகள்

* சைதாப்பேட்டை சென்னை உருது தொடக்கப்பள்ளி
* சைதாப்பேட்டை திடீர்நகர் நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
* கிண்டி லயன்ஸ் கிளப் தொடக்கப்பள்ளி
* நந்தனம் ஒய்.எம்.சி.ஏ காலேஜ் ஸ்போர்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி
* நந்தனம் சென்னை தொடக்க பள்ளி மற்றும் சென்னை மேல்நிலைப்பள்ளி
* சாலிகிராமம் அம்பத்தூர் அரிமா சங்க நடுநிலைப்பள்ளி
* வடபழனி புலியூர் சென்னை தொடக்கப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி
* மேற்கு மாம்பலம் சென்னை மேல்நிலைப்பள்ளி
* ஈக்காட்டுதாங்கல் சென்னை தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சென்னை உயர் நிலைப்பள்ளி
* சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி
* புளியந்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர் நிலைப்பள்ளி
* தரமணி சென்னை மேல்நிலைப்பள்ளி
* கோட்டூர்புரம் சென்னை தொடக்கப்பள்ளி
* அடையாறு காமராஜர் அவென்யூ சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர் நிலைப்பள்ளி

மேலும் 29 பள்ளிகளை தவிர பிற பள்ளி, கல்லூரிகள்  வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

13 Dec 2015

சமையலில் பயன்படுத்தப்படும் பாெருள்களின் பட்டியல் / தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

சமையலில் பயன்படுத்தப்படும் பாெருள்களின் பட்டியல் / தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

வசம்பு Acorus
பாதாம் பருப்பு Almonds
சோம்பு Anise
பெருங்காயம் Asafoetida
ஓமம் Bishop’s weed
கடலை பருப்பு Black gram
கற்பூரம் Camphor
குடை மிளகாய் Capsicum
ஏலம் [ஏலக்காய்] Cardamom
முந்திரி Cashew
முந்திரி பருப்பு Cashew Nuts
பாலாடைக்கட்டி Cheese
மிளகாய் Chillies
கொத்தமல்லி Cilantro
லவங்கப்பட்டை Cinnamon
லவங்கம் Cloves
சேப்பங்கிழங்கு Colocasia
தனியா, கொத்தமல்லி விதை Coriander
மக்கா சோளம் Corn
வால்மிளகு Cubebs
சீரகம் Cumin
கரிவேப்பிலை Curry leaves
வெந்தயம் Dill
கன்டந்திப்பிலி Dried long pepper
சுக்கு Dry Ginger
கிஸ்மிஸ் Dry Grapes
பெருஞ்சீரகம் Fennel
வெந்தயம் Fenugreek
கடுக்காய், மாசிக்காய் Gallnut
கொண்டை கடலை Garbanzo beans
வெள்ளைப் பூண்டு Garlic
நல்லெண்ணெய் Gingelly oil
இஞ்சி Ginger
பச்சை மிளகாய் Green Chilli
பயத்தம் பருப்பு Green gram dhal
பச்சைப்பயறு Green gram Split
பாசி பருப்பு Green gram Whole
வெங்காயத்தாழ் Green onions
நொய்யரிசி Grit
சாம்பிராணி Incense
வெல்லம் Jaggery
அதிமதுரம் Licorice
ஜாதிபத்திரி Mace
கஸ்தூரி Musk
கடுகு Mustard
கருஞ்சீரகம் Nigella-seeds
ஜாதிக்காய் Nutmeg
ஆலிவ் ஆயில் Olive Oil
வெங்காயம் Onion
பாமாயில் Palm Oil
வேற்கடலை Peanuts
பட்டாணி Peas
மிளகு Pepper
ஊறுகாய் Pickle
கசகசா Poppy
வரமிளகாய் Red Chilli
சிவப்பு மிளகாய் Red Chillies
அரிசி Rice
கோதுமை நெய் Rolong
பன்னீர் Rose water
குங்குமப்பூ Saffron
ஜவ்வரிசி Sago
உப்பு Salt
நன்னாரி Sarasaparilla
குழம்பு Sauce
ரவை Semolina
சர்க்கரை Sugar
கற்கண்டு Sugar Candy
தூள் உப்பு Table Salt
வால் மிளகு Tailpepper
புளி Tamarind
மஞ்சள் Turmeric
துவரம் பருப்பு Yellow split peas
துளசி இலை Basil leaves
புன்னை இலை Bay leaves
வெண்ணைய் Butter
மோர் Butter milk
தயிர் Curds
நெய் Ghee
எள்ளு Gingili (seasame seeds)
கடலையெண்ணை Ground nut oil
தேன் Honey
எழுமிச்சை Lemon
பால் Milk
புதினா Mint leaves
பனங்கருப்பட்டி Palm jiggery
கொடுக்காபுளி Pithecellobium dulce (Madras thorn)
உலர்திராட்சை Raisin
சேமியா Vermicelli

சர்வதேச நகரங்களின் நேரம்

தென் மாவட்டங்களில்கன மழை பெய்யும்

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் கடலோர மாவட்டங்களில், கன மழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:குமரி கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த, காற்று மேலடுக்கு சுழற்சி, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு அருகே நகர்ந்துள்ளது. இதனால், ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும்.
வட உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில், ஒருசில இடங்களில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக, 31; குறைந்தபட்சம், 24 டிகிரி செல்சியசாக இருக்கும்.
பரவலாக, அடுத்த மூன்று நாட்களுக்கு, கனமழைக்கு வாய்ப்பு இல்லை. நேற்று காலை, 8:30 மணி வரை, அதிகபட்சமாக, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - 4; கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி - 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

"வனத்துக்குள் திருப்பூர்' திட்ட நிறைவு விழா இன்று! பங்கேற்க பசுமை ஆர்வலர்களுக்கு அழைப்பு

வனத்துக்குள் திருப்பூர்' திட்ட நிறைவு விழா, திருப்பூரில் இன்று நடைபெறுகிறது; நம் மாவட்டத்தை, மரங்களால் பசுமையாக்கும் லட்சிய திட்டத்தின் நிகழ்வில் பங்கேற்க, பசுமை விரும்பிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூய காற்று, பருவம் தவறாத மழை, நீர் ததும்பும் நீர் நிலைகள், குளிர்ந்த சீதோஷ்ண நிலை, பறவைகள், நுண்ணுயிரிகளுக்கு ஆதாரம் என, உலக உயிர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளவை, மரங்கள். மரங்களை அழித்ததால், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல பிரச்னைகளை இன்று சந்தித்து வருகிறோம்.

இதற்கு தீர்வாக, மரங்களை வளர்க்கும் "வேள்வி'யாக, ஆக., 23ல் "வனத்துக்குள் திருப்பூர்- 2015' திட்டம் துவங்கப்பட்டது. இதுவரை, 1.30 லட்சம் மரக்கன்றுகள் நடப் பட்டுள்ளன. இதற்கு, "வெற்றி' அமைப்புடன், "தினமலர்' நாளிதழ் இணைந்து, பசுமை எழுச்சியை உருவாக்கி, மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தை, மக்கள் மனதில் விதைத்தது.

திட்டம் துவங்கியது முதல், சேவை அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், பசுமை ஆர்வலர்கள், போலீசார், அறநிலையத்துறையினர், மாணவ, மாணவியர் என, பலதரப்பட்டவர்களும், இத்திட்டத்தில் ஆர்வமாய் இணைந்ததால், இலக்கை தாண்டி, மரக்கன்று நடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், இத்திட்டம் தூண்டுகோலாக மாறி, பசுமை உணர்வை வளர்த்துள்ளது. வழக்கமான மரக்கன்று நடும் நிகழ்வாக இல்லாமல், இத்திட்டத்தில்,நடப்பட்ட மரக்கன்றுகளை, இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணி ற்கொள்ளப்படுகிறது."மரங்களை வளர்த்தால், சொர்க்கத்தில் இடமுண்டு' என, விருட்ஷ சாஸ்திரம் கூறுகிறது. ஒரு மரம் வளர்ப்பது, 10 குழந்தைகளை வளர்ப்பதற்கு சமம். வாழும் தலைமுறைக்கும், வளரும் தலைமுறைக்கும் தூய காற்று, இதமான வெப்ப நிலை, மழைப்பொழிவு என, அற்புதமான சூழலை உருவாக்க மரங்கள் துணை நிற்கும்.

இன்று நிறைவு விழா
உன்னதமான இத்திட்டத்தின் நிறைவு விழா, திருப்பூர் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் இன்று, காலை, 9:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 வரை விழா நடைபெறும். பகல், 11:00 வரை நடக்கும் முதல் அமர்வில், நிலங்களை மரங்களால் நிரப்பிய பசுமை குடும்பங்கள் கவுரவிக்கப்படுகின்றனர். "தினமலர்' நாளிதழ் துணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தென்மண்டல சி.பி. சி.ஐ.டி., - எஸ்.பி., அமித்குமார் சிங், கோவை "சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பகல், 11:00 முதல், 1:00 வரை நடக்கும் இரண்டாவது அமர்வில், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற டிராக்டர் வழங்கியதுடன், பராமரிப்பு செலவை ஏற்றுள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள், கவுரவிக்கப்பட உள்ளனர். வெற்றி அமைப்பு தலைவர் சிவராம் வரவேற்கிறார். அமைச்சர் ஆனந்தன், கலெக்டர் கோவிந்தராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கந்தசாமி உள்ளிட்டோர், பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில், பெங்களூரு வாழும் கலை பயிற்சி அமைப்பு அறங்காவலர் அருண் மாதவனின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. முதல் அமர்வின்போது, தனியார் நிலங்களில் மரக்கன்று நடப்பட்ட நிகழ்வுகள், களப்பணிகள், பெரிய அளவிலான "எல்.இ.டி.,' திரையில் ஒளிபரப்பப்படும். நீர் விடும் பணியில் ஈடுபட்டுள்ள டிராக்டர்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி, "வெற்றி' அமைப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் முறை குறித்த செயல் விளக்கம் காண்பிக்கப்படும்.நடப்பட்ட மரக்கன்றுகள் குறித்த, நிலவியல் அளவீடு, மரக்கன்றுகளின் வகைகள், எண்ணிக்கை, முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய, "டிஜிட்டல்' பதிவு, அமைச்சரிடம் வழங்கப்படும். மரக்கன்றுகளை நட்டதோடு விட்டுவிடாமல், தொடர்ந்து பராமரித்து, இரண்டு ஆண்டுகள் வளர்த்து, நம் மாவட்டத்தை பசுமையாக்கும் உன்னதமான திட்டத்துக்கான, அற்புதமான இந்நிகழ்ச்சியில், அனைத்து தரப்பினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கட்டடத்திற்கு வாடகை செலுத்தும் கிராம மக்கள்


லூதியானா : குழந்தைகளின் எதிர்கால நலனை கருதி, வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு, கிராம மக்களே வாடகை செலுத்தி வரும் விவகாரம் அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது பதேபூர் அவானா கிராமம். இந்த கிராமத்தில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளி கட்டடத்தில் நிலை சரியில்லாததால், மாவட்ட நிர்வாகம், கடந்த செப்டம்பரில் அந்த பள்ளி கட்டிடத்தை இடித்துத் தள்ளியது.

புதிய கட்டிடம் கட்ட மாநில அரசு இன்னும் நிதி ஒதுக்காததால், அப்பகுதி குழந்தைகள் கல்வி கற்க மிகவும் சிரமப்பட்டனர். தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றெண்ணிய அக்கிராம மக்கள், ஒரு வாடகை கட்டிடத்தில் பள்ளி செயல்பட முடிவு செய்தனர். அந்த கட்டிடத்திற்கான வாடகை ரூ. 5 ஆயிரத்தை, கடந்த இரண்டு மாதங்களாக, அக்கிராம மக்களே கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

நாளை பள்ளிகள் திறப்பு: இயல்பு நிலையை காட்ட வேண்டுமாம்

'எந்த நிலையில் இருந்தாலும், பள்ளிகளை நாளை திறந்து இயல்பு நிலையை காட்ட வேண்டும்' என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், சுத்தம் செய்யப்படாத பள்ளிகளில், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

நான்கு மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 

எச்சரிக்கை:


'பள்ளிகளை திறந்தால் தான், இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அர்த்தம். எனவே, பள்ளி விடுமுறையை நீட்டித்தால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். என்ன நிலையில் இருந்தாலும், பள்ளிகளை திறக்க வேண்டியது அந்தந்த தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு' என, அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:'பள்ளியை திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்' என்று கூறிவிட்டு, வேலைக்கான ஆட்களையே வழங்கவில்லை. உள்ளூர் காரர்கள், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் எவ்வளவு தான் வேலை பார்க்க முடியும். 
சில குறிப்பிட்ட மின் சாதன பராமரிப்பு, கீழ்நிலை தொட்டி மற்றும் மேல்நிலை தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல், கல்லுாரி வளாகத்தை பராமரித்தல், கழிப்பறையை சுத்தம் செய்தல், கரையான் பிடித்த தளவாட பொருட்களை அகற்றுதல் என, முக்கிய பணிகளுக்கு கூட ஆட்கள் இல்லை; பொருளுதவியும் இல்லை.

பகுதிவாசிகள்:


பிற மாவட்ட ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடிக்க, உதவி இருக்க வேண்டும். அதை விடுத்து, அவ்வப்போது அதிகாரிகள் வந்து, 'விசிட்' அடித்துவிட்டு, 'இன்னும் ரெடியாகலையா?' என கேட்டு, நெருக்கடி தருகின்றனர். பல பள்ளிகளில் அடைக்கலமாகி உள்ள பகுதிவாசிகளை, கட்டாயப்படுத்தி வெளியேற்றுகின்றனர். இயல்புநிலை வந்துள்ளதாக செயற்கையாக காட்ட, கல்வித்துறை இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

முழுமையாக சுத்தம் செய்யப்படாத பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில், ஈரமாக இருக்கும் சுவர்கள் மற்றும் குவிக்கப்பட்ட குப்பையால், நோய் பரவும் வாய்ப்புள்ளதாக, பெற்றோர் கவலையடைந்து உள்ளனர்.

திருப்பூருக்கும் நேரிடும் சென்னை கதி? நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

திருப்பூர்,:திருப்பூரில் குளம், குட்டை, ஓடை என நீர் நிலைகளை ஆக்கிரமித்து, அதிகளவு அரசு அலுவலகங்கள், கட்டடங்கள் உள்ளன. சென்னையை போல், கனமழை பெய்தால், கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்பூர் நகரின் பரப்பளவு, 169 சதுர கிலோ மீட்டர். நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை பள்ளம், சங்கிலிபள்ளம், கள்ளப்பாளையம், சபரி ஓடைகள், மொத்தம் 41.95 கி.மீ., நீளம் உள்ளன. மழை நீரை சேமிக்க, 60க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் இருந்தன.ஆக்கிரமிப்பு மற்றும் நகர வளர்ச்சி, போக்குவரத்துக்கான சாலை வசதி, என பல காரணங்களால் இவை, கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. பல ஓடைகள் மாயமாகிவிட்டன. ஆறு, ஓடைக கழிவு நீர் வாய்க்கால்களாக மாறியுள்ளன.

நீர் நிலைகளை, தனியார் பலர் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதனை அகற்றி, காப்பாற்ற வேண்டிய அரசு நிர்வாகமே, அவற்றை ஆக்கிரமித்துள்ளதுதான் கொடுமை. கடந்த 2011ல், நொய்யலில் வெள்ளப்பெருக்கு பாதிப்பு தந்த எச்சரிக்கையை உதாசீனம் செய்து, அரசு அதிகாரிகள் தொடர்ந்து, நீர் நிலைகளை அழித்து வருகின்றனர்.இப்போதுள்ள கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகம் ஆகியவை, சில ஆண்டுகளுக்கு முன் வரை நீர் தேங்கிய குளம் ஆகும். தெற்கு எம்.எல்.ஏ., அலுவலகம், ஒரு காலத்தில் குட்டையாக இருந்தது. பெய்யும் மழை நீர் இங்கு தேங்கி, உபரி நீர் கலெக்டர் அலுவலக குளத்துக்கு செல்லும்.

முருகம்பாளையம், பல்லடம் பகுதிகளில் பெய்யும் மழை நீர், வீரபாண்டி ஓடை வழியாக வந்து, நொய்யல் ஆற்றில் கலக்கும். ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்த ஓடையை ஆக்கிரமித்து, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்திற்காக, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பம்பிங் ஸ்டேஷன் ஆகியவை கட்டப்பட்டன.மாநகராட்சி துவக்கப்பள்ளி துவங்கி, மேல்நிலைப்பள்ளி வரை ஓடையை மறித்து கட்டப்பட்டுள்ளது. மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவை உள்ளன. கடந்த 2011ல் பள்ளி, ரேஷன் கடை ஆகியன வெள்ளத்தில் மூழ்கின.

ஏறத்தாழ, 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சந்திராபுரம் பகுதியில், பெரிய அளவில் குட்டை இருந்தது. அது ஆக்கிரமிக்கப்பட்டு, அம்மா உணவகம் கட்டப்பட்டது. இப்போதும் கூட, மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் தேங்குகிறது.பி.என்.ரோடு வழியாக வந்த மந்திரி வாய்க்கால் ஓடை, முழுமையாக மாயமாகி, தற்போது கழிவு நீர் சாக்கடையாக மாறி விட்டது. இதன் மீதுதான் ரேஷன் கடை, மின் வாரிய அலுவலகம் உள்ளது. ஓடை இருந்ததற்கும், மழை நீர் வடிவதற்கும், இரட்டைக்கண் பாலம் மட்டுமே சாட்சியாக உள்ளது.

திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, நான்கு ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் இருந்தது. ஜம்மனை அணையிலிருந்து, ராஜவாய்க்கால் வழியாக, இந்த குளத்துக்கும், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் நந்தவனம் வழியாக, நொய்யல் ஆற்றில் கலக்கும் வகையில், நீர் வழித்தடம் இருந்தது. தற்போது, குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, பூ மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ளது. சிறிய மழைக்கே, இப்பகுதி சாலை, வெள்ளக்காடாக மாறி விடுகிறது.
இதே போல், ஆறுகள், ஓடைகளை ஆக்கிரமித்து, ஏறத்தாழ, 6 ஆயிரம் வீடுகள் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக, மாநகராட்சி சார்பில், ரோடுகள், குடிநீர் தொட்டி, கழிப்பிடம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, ஏராளமான, குளம், குட்டை, ஓடைகள் அழிக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே, ஆக்கிரமிப்பாளர் ஆக மாறியுள்ள இந்நகருக்கு, எப்போது வேண்டுமானாலும் சென்னையைப் போல் வெள்ள பாதிப்பு வரலாம். அதற்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், திருப்பூர் பின்னலாடை தயாரிப்பு பேரிழப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

டிச., 23ல், மிலாடி நபி; 25ல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருகின்றன. 26ல், நான்காவது சனிக்கிழமை விடுமுறை; 27ல், ஞாயிறு விடுமுறை என, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 23ல் அறிவிக்கப்பட்ட மிலாடி நபி, 24க்கு மாற்றுப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி மாற்றி அறிவித்தால், 24 முதல், 27 வரை, 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

இதுகுறித்து, கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'மிலாடி நபி விடுமுறை, டிச., 23' என, வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், இதுவரை மாற்றம் இல்லை. அதனால், 24ல், வங்கிகள் இயங்கும். 25 முதல் 27 வரை விடுமுறை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

10 Dec 2015

பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

புதுச்சேரி: பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பர் 14-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தைகள் தின விழா தொடர் மழையால் ஒத்தி வைக்கப்பட்டு கம்பன் கலையரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது.கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா முன்னிலை வகித்தார்.குழந்தைகள் தினப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:


பள்ளிகளுக்கு பிள்ளைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தை கடந்த 2001-ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது. இதனால் இடைநிற்றல் குறைந்துள்ளது.பள்ளிகளில் மாணவர்கள் தவறு செய்யும் போது, ஆசிரியர்கள் கண்டித்தால், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக நன்கொடை தந்து படிக்க வைக்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அரசு இலவசமாக கல்வி தருகிறது.குழந்தைகள் எப்படி படிக்கின்றனர் என ஆசிரியர்களை அணுகி பெற்றோர் கேட்க வேண்டும்.அண்மையில் துவக்க கல்வி ஆசிரியர் பணியிடங்களில் 425 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களே தேர்வு செய்யப்பட்டனர். விரைவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இன்றைய மாணவர்கள் அறிவுத்திறனில் படுசுட்டியாக உள்ளனர். ஆனால் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை படித்தால், சிறந்த மனிதர்களாக உருவாகலாம்.கல்வியோடு நுால்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண் சிசுக் கொலை புதுச்சேரியில் இல்லை. இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000-க்கு 42 என்ற விகிதத்தில்உள்ளது. புதுச்சேரியில் 1000-க்கு 17 மட்டுமே உள்ளது.அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகள் ஆரோக்கியத்துக்காக சத்தான உணவுகள் தரப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் கிளை மருத்துவக்கல்லுாரி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக 78 ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மாணவ, மாணவியருக்கு பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவர்கள் அண்மையில் முடிந்த மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கு அதிகம் தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் 2014--15-ம் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர் களுக்கு முறையே 50 ஆயிரம்,30 ஆயிரம் , 20 ஆயிரம் ரூபாய் என 77 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.மாநில சிறந்த படைப்பாளிக் குழந்தைகள் விருதும் 16 பேருக்கு தரப்பட்டது. குழந்தைகள் தின போட்டியில் வென்ற 153 பேருக்கும் பரிசளிக்கப்பட்டது.அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குநர் கிருஷ்ணராஜ், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். இணை இயக்குநர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்


சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.


கடந்த 2004 ஆம் ஆண்டு ஐ.நா பொதுக்கூட்டத்தின் போது டிசம்பர் 9 ஆம் திகதி ஊழல் எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.   இந்த ஆண்டு  ஊழல் எதிர்ப்புத் தினமானது 'ஊழல் சங்கிலியை உடைப்போம்' என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்க ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள்  அலுவலகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி ஊழல் தொடர்பான விழிப்புணர்வு ,வகிபங்கு, எதிர்ப்பு மற்றும் தடுப்பு என்பவற்றை நோக்காகக் கொண்டு அனுஸ்டிக்கப்படவுள்ள இந்தத் தினத்திற்கான உடன்படிக்கை கடந்த 2015 ஆம் உள்வாங்கப்பட்டது.   ஊழலானது நாடுகளின் சமூக, அரசியல் , பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதுடன் நிறுவனங்களின் ஜனநாயகத் தன்மையை இல்லாமற் செய்யும்.பொருளாதார அபிவிருத்தியை மந்த நிலைக்கு கொண்டு செல்லும். இதனைத் தடுக்கும் நோக்கிலே ஐ.நா ஊழல் எதிர்ப்புத் தினத்தை பிரகடனப்படுத்தியது.   மேலும் அதிக இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 85 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.   உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 175 நாடுகளை மையப்படுத்திய இந்த பட்டியலில் 85 ஆவது இடத்தில் இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

III STD SLAS MODEL QUESTION PAPER


.



சர்வதேச மனித உரிமை தினம் (டிசம்பர் 10)



உலகில் பிறப்புரிமை, எழுத்துரிமை , கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப்பெற்று அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. அமைப்பால் ஆண்டுதோறும் டிச.10-ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
நாட்டின் சமூக, பொருளாதார அரசியல், நீதி ஆகியவற்றில்
மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நாடு,மதம், இனம், மொழி, ஜாதி,, வசதி என்ற காரணங்களால் இந்த உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
மனித உரிமை
மனித உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் ஆகும்.
இந்த உரிமைகள் ‘மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான விட்டுக் கொடுக்க இயலாத மறுக்க முடியாத சில உரிமைகளாக’ கருதப்படுகின்றன.
இனம் சாதி நிறம் சமயம் பால் தேசியம் வயது உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள் மனிதர் சுதந்திரமாக சுமூகமாக நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன.
மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் வாழும் உரிமை சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் சட்டத்தின் முன் சமநிலை நகர்வுச் சுதந்திரம் பண்பாட்டு உரிமை உணவுக்கான உரிமை கல்வி உரிமை என்பன முக்கியமானவை
அடிப்படை மனித
உரிமைகள்
எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன.
அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள்
செயல்முறைக் காரணங்களுக்காக ஏதாவதொரு அரசாங்கத்திற்கு மக்களின் சகல மனித உரிமைகளையும் சட்டத்தினால் நன்கு பாதுகாக்கமுடியாது.
மனித உரிமைகளுள் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகள் மாத்திரம் அடிப்படை உரிமைகள் என அறிமுகமாகிறது.
அதாவது உலக மனித உரிமைப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல மனித உரிமைகளும் இலங்கை அரசினால் செயற்படுத்தமுடியாது என்பதுடன் 1978 ம்; ஆண்டு அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மாத்திரமே மக்களுக்கு உரித்தானதாகும்.
உதாரணமாக உலக மனித உரிமைப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3ம்பிரிவு உயிர் வாழும் உரிமை பற்றிக் கூறுகின்றபோதிலும் இலங்கை அரசின் 1978 ம் ஆண்டு அரசியலமைப்பின்கீழ் இது அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இலங்கை அரசின் 1978 ம் ஆண்டு அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்
1978 ம்; ஆண்டு அரசியலமைப்பின்கீழ் இது அடிப்படை உரிமைகளத் தயாரிப்பதற்கு ஜக்கிய நாடுகளின் உலக மனித உரிமைகள் பிரகடனத்தைப் பின்பற்றியுள்ளது.
உதாரணம் .
அடிப்படை உரிமைகள் பற்றி 1978 ம் ஆண்டு அரசியலமைப்பின் 3ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3ம் அத்தியாயத்திலுள்ள
10வது 11வது 12 வது 13 வது 14வது 15வது உறுப்புரைகள்.
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் கல்வி
1948 டிசம்பர் 10ம் திகதி ஜக்கிய நாடுகள் பொதுச்சபை அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது.
மொத்தமாக 30 உறுப்புரைகள் உள்ளன. அதில் உறுப்புரை 26 நேரடியாக கல்வி உரிமையைப் பற்றிச் சொல்கிறது.
உறுப்புரை 26.
(1) ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது தொடக்க அடிப்படைக்கட்டங்களிலாவது கல்வி இலவசமாயிருத்தல் வேண்டும்.தொடக்கக்கல்வி கட்டாயமானதாயிருத்தலவசியம்.தொழினுட்பக்கல்வியும் உயர்தொழிற்கல்வியும் பொதுவாக பெறக்கூடியதாயிருத்தல் வேண்டும்.உயர்கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக்கூடியதாக்கபடுதலும் வேண்டும்.
(2) கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்டுத்துமுகமாகவும் ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்குமிடையேயும் இன அல்லது மதக் குழுவினருக்கிடையையேயும் மன ஒத்திசைவு பொறுதியுணர்வு தோழமை ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டும் என்பதுடன் சமாதானத்தைப் பேணுவதற்காக ஜக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும்.
பொருளாதார கலாசார உரிமைகள் சமவாயத்தில் கல்வி
பொருளாதார கலாசார சிவில் உரிமைகள் சர்வதேச சமவாயத்தில் 15 உறுப்புரைகள் உள்ளன.அவற்றில் 13வது 14 வது உறுப்புரைகள் கல்வியைச் சார்ந்ததாகும்.
கல்வியோடு சம்பந்தப்பட்ட சிறுவர் அணி பற்றியும்; அவர்களது உரிமைகள் பற்றியும் சற்று பார்க்கலாம்.
சிறுவர்கள் என்ற தரப்பினர் இரண்டாம் உலக மகா யுத்தம் வரையில் கவனத்தில் கொள்ளப்படாத குழுவினராக காணப்பட்டனர். சிறுவர்களுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியன மிக மிக அத்தியவசியமான தேவையாகும். இச் சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் பாதுகாக்கப்படுதல் என்பது 1948ம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் வருகையுடனே ஆரம்பித்தது.
குறிப்பாக சிறுவர் உரிமைகள் தொடர்பில் 1989ம் ஆண்டு சிறுவர் உரிமை சாசனம் கொண்டுவரப்பட்டமை ஒரு மைல் கல்லாகும். 1989ம் ஆண்டு பொதுச் சபையினால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் சாசனம் உயிர் வாழ்தல் பாதுகாப்பு அபிவிருத்தி பங்குபற்றல் ஆகிய பிரதான உரிமைகளை உள்ளடக்கிருந்தது.
இலங்கை அரசு 1991ம் ஆண்டு சிறுவர் உரிமை சாசனத்தை ஏற்று அங்கீகரித்த போதிலும் கடந்த காலத்தின் அத்தியாயத்தை புரட்டிப் பார்க்கையில் யுத்தம்பொருளாதார நெருக்கடிகள் போசாக்குப் பற்றாக்குறை போன்ற பல காரணங்களாலும் சிறுவர்களை கடத்தல் மற்றும் மோசடி போன்ற காரணங்களாலும் பாலியில் ரீதியான வன்முறைகளாலும் சிறுவர் தொழில் போன்ற சுரண்டல்களாலும் ஆயிரக்கணக்கான சிறார்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்கள் பல்வேறு வடிவங்களில் தலைதூக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கடந்த வருடங்களில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்ற போக்கை அவதானிக்க கூடிய அதேவேளை மலையகத்தை எடுத்துக் கொண்டால், சிறுவர்கள் தொழிலாளர்களாக்கப்படுவதால் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுகின்ற அதே நேரம் தொடர்ச்சியான மர்ம மரணங்கள், சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றதுடன் இலங்கைச் சமூகம் எதிர்நோக்கும் ஒரு புதிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அண்மையில் அரச மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து சிறுவர்களுக்கெதிரான தொடர்ச்சியான வன்முறை பற்றிய கலந்துரையாடலை மேற்கொண்ட போது சிறுவர் உரிமை மீறல்களுக்கு பிரதான காரணங்களாக பின்வருவன இனங்காணப்பட்டன.
1. பெற்றோர் பாதுகாவலரின் கவனமின்மை
2. துஸ்பிரயோகத்தை மேற்கொள்வதற்கான சூழல் அல்லது சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்
3. குற்றவாளிக்கு அதிகாரிகள் அல்லது ஒரு சில சமூகப்பெரியோர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கல்.
4. சிறுவர் உரிமைகள் மீறப்படும் போது வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக விழிப்புணர்வின்மை
5. கலாசார காரணிகள்
பொதுவாக இன்றைய பொருளாதார நெருக்கடியுடன் பிள்ளைகளை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக பாடுபடும் பெற்றோர்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் கூடுதலான கவனத்தை காட்டுகின்றனர்.
இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகுகின்றது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளை எடுத்துக் கொண்டால், அதிகளவில் துஸ்பிரயோகங்களுக்குள்ளாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சாசனமானது 18 வயதுக்குட்டபட்ட சகலரும் சிறுவர்கள் என்று வரையறுத்த போதிலும் இலங்கையை பொறுத்தளவில் கட்டாயக்கல்வி என்பது 14 வயது வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பல பாடசாலைகள் ஆரம்பக் கல்வியை மாத்திரம் கொண்டு அமைந்திருப்பதாலும் மேலும் பல்வேறு காரணிகளாலும் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிச் சென்று சிறுவர் தொழிலாளர்களாக உருவாகும் சிறார்களின் நிலைமைகளை நோக்கும்போது தலைவிதி மரணத்தில் முடிவடைந்துள்ளது.
மேலும் இன்றைய சிறார்களை ஆட்டிப்படைக்கும் இன்னொரு காரணியாக கல்விக் கூடங்களில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைச் சுட்டிக் காட்டலாம். பாடசாலைகளிலும் தனியார் வகுப்புகளிலும் சென்று மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்குள்ளாகின்றனர்.
எனவே இத்தகைய நிலமைகளின் போது குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் உயர் மட்ட அதிகாரிகளினால் பாதுகாக்கப்படுகின்றனர்.
இன்று இவ்வாறான பல சம்பவங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் அசமந்த போக்கின் காரணமாக குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்.
உதாரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சட்ட உதவியை நாடுகின்ற போது தேவைப்படும் ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதனை தாமதமாக்குதல் உரிய ஆவணங்களை வழங்க மறுத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
கலாசார ரீதியான காரணிகள் இன்று சிறுவர் உரிமை மீறல்களை வெளிக் கொணர்வதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் குடும்பத்தின் கௌரவம் அந்தஸ்து பிள்ளையின் எதிர்காலம் ஆகிய காரணிகளைக் கருத்திற் கொண்டு வெளிக்கொணரப்படுவதில்லை.
இலங்கை போன்ற நாடுகளில் சிறுவர் உரிமை மீறல்களுக்கு ஏதுவான காரணிகளுள், மக்கள் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வில்லாதிருப்பதையும் அதேபோல் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் போது விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவின்மையையும் குறிப்பிடலாம்.
சிறுவர் துஸ்பிரயோகம் என்பது வேறு தரப்பினரால் சிறுவர் சட்டபூர்வமற்ற ஒரு செயலுக்காக ஈடுபடுத்துதல்.
சிறுவர் துர்நடத்தை என்பது சிறுவனாலேயே செய்யப்படுகின்ற சட்டபூர்வமற்ற செயல்களாகும்.
இவ்விதமாக இரு விதங்களில் உந்தவொரு செய்கையும் சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெறக்கூடிய குற்றமாகும்.
முக்கிய விடயங்கள்
18 வயதைப் பூர்த்தி செய்தவரின் சட்டப்படி பராயமடைந்தவராகக் கருதப்படுவார்.
ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு ஆணுக்கு திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்த வயது 18 ஆகும்.(முஸ்லிம் விதிவிலக்கு)
16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையுடன் அவரின் விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ பாலியல் தொடர்பு கொள்ளும் ஒருவர் தண்டனைச் சட்டக்கோவையின்படி பாரதூரமான குற்றத்தைச் செய்தவராகிறார்.
13 வயதுக்கு குறைவான சிறுவனை வேலைக்கமர்த்தினால் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
14 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் கட்டாயமாகும்.1997ஆம் ஆண்டின் 100-35 இலக்க அரச வர்த்தமானி கூறுகிறது.
பாடசாலைச் சிறுவர்களுக்கு உடல் சார்ந்த தண்டனையளித்தல் கல்வியமைச்சின் 2005-17ம் இலக்க சுற்றுநிருபம் கூறுகிறது.
ஜக்கிய நாடுகளின் சிறுவர்உரிமைகள் பற்றிய உடன்படிக்கை என்பது உலகிலுள்ள சகல சிறுவர்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாசனமாகும்.இது 1989 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ் உடன்படிக்கைக்கு இன்று வயது 101 ஆகும். இதில் 54 பிரிவுகள் உள்ளன. முதல் 42 பிரிவுகள் சிறுவர் உரிமை பாதுகாப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.மீதி 12ம் அந்த அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட வேண்டியன பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டவமைப்பினுள் சிறுவர் உரிமைகள் இலங்கையில் 1883 ல் முதல்முறையாக சிறுவர்க்கான தண்டனைச்சட்டக் கோவை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு 1995 இலும் 1998இலும் திருத்தம் செய்யப்பட்டது.
ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறுகிறது. உலகில் வாழ்கின்ற மக்களில் 1/3 பங்கினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர். சிறுவர்கள் நாளைய தலைவர்கள்.
அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தங்கி வாழ்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளானவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர்.
எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

9 Dec 2015

இனி ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் டைப் செய்வது எளிது

ஆசிரியர்கள் தங்கள் மொபைலில் தமிழில் டைப் செய்ய . உங்கள் appல் சென்று Tamil Hand writing download செய்யவும். அதில் விரலால் எழுதினால் தமிழில் தானே டைப்பாகும் .அதே போல் Voice writing ல் Voice தானாக டைப் ஆகும். பயன்படுத்தி . பாருங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் மட்டும். இதே வசதி ஆங்கிலத்திலும் உள்ளது.
அந்த செயலியைத் தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்




7 Dec 2015

‎தமிழ்‬ இலக்கணச் சொற்களுக்கு ஆங்கிலம்



#‎தமிழ்‬ இலக்கணச் சொற்களுக்கு ஆங்கிலம்
எழுத்து - Letter
முதல் எழுத்து – Primary letter
சார்பு எழுத்து – Secondary letter
உயிர் – Vowels
மெய் – Consonants
ஆய்தம் – Guttural
குறில் – Short Letters
நெடில் – Long letters
அளபெடை – Prolongation of letters,
Protraction
சுட்டெழுத்து – Demonstrative letters
அண்மைச் சுட்டு – Proximate demonstratives
சேய்மைச் சுட்டு – Remote demonstratives
வினாவெழுத்து – Interrogative letters
இன எழுத்து – Kindred letters
வல்லினம் – Hard Consonants
மெல்லினம் – Soft Consonants
இடையினம் – Medial Consonants
உயிர்மெய் – Vowel-Consonants
குற்றியலுகரம்- Shortened
குற்றியலிகரம் – Shortened
பெயர்ச்சொல் – Noun
வினைச்சொல் – Verb
இடைச்சொல் – Interjection, Conjunction,
Particles and Adjuncts
உரிச்சொல் – Adjective and Adverb
பொருட் பெயர் – Names of things
இடப்பெயர் – Names of places
காலப் பெயர் – Names of times
சினைப் பெயர் – Names of parts or the
organs of the body
குணப் பெயர் – Names of quality
பண்புப் பெயர் – Abstract Nouns
தொழிற் பெயர் – Verbal Nouns
வினாப் பெயர் – Interrogative Nouns
இடுகுறிப் பெயர் – Conventional Nouns –
Arbitraries
காரணப் பெயர் – Casual Noun
காரண இடுகுறிப் பெயர் – Casual noun
used as a Coventional Noun
பொதுப்பெயர் – Epincene,
Common or generic Names
ஆகுபெயர் – Metaphor, Metonymy,
Synecdoche
ஆக்கப் பெயர் – Optional
வினையாலனையும் பெயர் – Conjugated
Nouns, Inflectional Nouns
எழுவாய் – Subject
பயனிலை – Predicate
செயப்படு பொருள் – Objective
force
உயர்தினை – Personal class
ஆஃறினை – Impersonal class
ஆண்பால் – Masculine Gender
பெண்பால் – Feminine Gender
பலர்பால் – Masculine plural and Feminine
plural
ஒன்றன்பால் – Neuter Singular
பலவின்பால் – Neuter plural
ஒருமை – Singular
பன்மை – Plural
தன்மை – First person
முன்னிலை – Second person
படர்க்கை – Third Person
முதல் வேற்றுமை – Nominative case
இரண்டாம் வேற்றுமை – Acuusative case
மூன்றாம் வேற்றுமை – Instrumental case
நான்காம் வேற்றுமை – Dative case
ஐந்தாம் வேற்றுமை – Ablative case
ஆறாம் வேற்றுமை – Genitive case
ஏழாம் வேற்றுமை – Locative case
எட்டாம் வேற்றுமை – Vocative case
அண்மை விளி – Proximate vocative case
சேய்மைவிளி – Remote Vocative Case
வேற்றுமைப் புணர்ச்சி – Casal combination
அல்வழிப் புணர்ச்சி – Combination with all other
parts of speeches, but nouns in one of the Cases
from 2 to 7
இயல்பு – Natural
விகாரம் – Change
தோன்றல் – Reduplication, Augmentation
திரிதல் – Changing, Permutation
கெடுதல் – Dropping, Omission
பகுபதம் – Derivative or

6 Dec 2015

DIRECT UG CANCELLATION OF INCENTIVE G O

CRC ---COMPENSATE LEAVE ---G.O

பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு.

5 Dec 2015

05/12/2015 PRIMARY CRC MODULES

5-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் இனி ரெயிலில் முழுக் கட்டணம் ரெயிலில் பயணம்

 செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. 5 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட் (பாதி கட்டணத்தில்) வழங்கப்படுகிறது. இந்த முறையை ரெயில்வே நிர்வாகம் தற்போது மாற்றியமைத்துள்ளது.



இதன்படி படுக்கை வசதி அல்லது இருக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதில் இடம்பெறும் 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான அரை டிக்கெட் முறை ரத்து செய்யப்படுகிறது.
இதையடுத்து, இனி அவர்களுக்கு முழு டிக்கெட்டே வழங்கப்படும். முன்பதிவுக்கான விண்ணப்ப படிவத்தில் இதற்கான திருத்தம் செய்யப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. அவர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயணம் செய்யலாம்.அதேசமயம் முன்பதிவில்லாத (அன்ரிசர்வ்டு) பெட்டியில் பயணிப்போர், தங்களது 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட் பெறலாம். அதில் மாற்றம் செய்யப்படவில்லை.இந்த திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் (2016) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்திய ரெயில்வே துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Bharathiar University B.Ed. Programme 2016-2018 Admission Notification

Bharathiar University

B.Ed. Programme 2016-2018 Admission Notification

Last Date for submission of Application -31.03.2016

Entrance Examination Date - 24.04.2016

Download Application & Prospectus now avail in www.b-u.ac.in

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்க மத்திய அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம் சேவை முடக்கம் என பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வங்கி சேவையையோ, ஏடிஎம் சேவையோ பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக டிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வங்கிகள் இயங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கிகளின் அலுவல் நேரத்தை நீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏடிஎம்களை செயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மீன்கள் ஏன் வடக்கு நோக்கிச் செல்கின்றன?

உயிரினங்கள் இடம்பெயர்ந்து செல்லும் அளவுக்கு அவற்றின் பருவ நிலை மாற்றத்தின் தாக்கம் இருக்கிறது
நமது மீன்கள் வடக்கு நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றன. 1980-களின் மத்தியில் வரை, மெக்கெரெல் மற்றும் எண்ணெய் மத்தி போன்ற முக்கியமான மீன் வகைகள், கேரளாவின் மலபார் கடற்பகுதியில் இருந்தன. புவி வெப்பமயமாதல் காரணமாக, 1967 2007 காலகட்டத்தில் இந்தியாவின் மேற்குக் கடற் கரைப் பகுதியின் வெப்பநிலை 0.6 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்திருப்பதாக, பருவ நிலை மாற்றத்துக்கான கேரள மாநிலச் செயல் திட்டத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதன் விளைவாக, இந்த மீன்கள், உயிர் வாழ்வதற்கு வசதியான வாழ்விடத்தைத் தேடி கடலில் வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கின. கடந்த 30 ஆண்டுகளில், வடக்கு திசையில் 650 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக அம்மீன்களின் எல்லை விரிவடைந்திருக்கிறது. கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தையும் தாண்டி இவை தற்போது குஜராத்தின் கடல்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்தும், மெக்கெரல் மீன்கள் வடக்கு நோக்கிச் சென்றுவிட்டன. முன்பு ஆந்திரக் கடற்கரையோரம் இருந்த இந்த மீன்கள் தற்போது மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் சென்று விட்டன.
காரணம் என்ன?
கடலில் மட்டுமல்ல, இந்தியாவின் நதிகளிலும் பல்வேறு மீன் இனங்களின் இடம்பெயர்வு நடந்திருக்கிறது. உதாரணத்துக்கு, கங்கை நதியில் இருந்து, மித வெப்ப நீர் மீன்களில் நான்கு இன மீன்கள், வட திசையில் ஹரித்வார் வரை சென்றுவிட்டன. இந்தப் பகுதியில் 1970-1986 காலகட்டத்தின் சராசரி வெப்ப நிலை, 2009-ம் ஆண்டுவாக்கில் 1.5 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்ததால் ஏற்பட்ட விளைவு இது.
புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவின் ஒவ்வொரு நிலப் பகுதியிலும், சுற்றுச்சூழலிலும் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. வெப்பநிலை உயர்ந்து வருவது ஒரு முக்கியமான காரணம் என்றாலும், மழைப் பொழிவில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. சில சமயங்களில், உணவுக்காகத் தாங்கள் சார்ந்திருக்கும் விலங்குகள் கிடைக்காமல்போவதால், மேலும் சில உயிரினங்கள் வேறு இடம் நோக்கிச் செல்லும் கட்டாயத்துக்கு ஆளா கின்றன. இந்தியாவுக்கு மட்டுமான நிலை அல்ல இது. உலக அளவில், தரையிலும் கடலிலும் வாழும் நூற்றுக் கணக்கான உயிரினங்கள் தொடர்பாகப் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நடத்தப்படும் ஆய்வுகள் தெரிவிக்கும் தகவல் இது: “ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி, துருவங்களின் திசையில் தங்கள் வாழ்விடத்தின் எல்லையை விரித்துக்கொண்டிருக்கின்றன. நிலப்பகுதியில் வசிப்பனவற்றில் பாதி உயிரினங்களும் இவ்வாறு இடம்பெயர்ந்திருக்கின்றன”.
நகரும் மரங்கள்
இந்திய இமய மலைப் பகுதி, கடந்த சில பத்தாண்டுகளாக சராசரியாக 1.5 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை உயர்ந்திருப்பதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் பல உயிரினங்கள் கடுமையான வெப்பத்தை உணர்கின்றன. ‘ஹிமாச்சலி ஆப்பிள்’ எனும் புகழ் பெற்ற ஆப்பிள் வகை, குலு பள்ளத்தாக்கில் இப்போது செழித்து வளர்வதில்லை. உத்தர்காண்ட்டில் மட்டும் 1970-களிலிருந்து, மரங்களின் அடுக்கு 1,000 அடிகளுக்கும் மேல் மலை மீது நகர்ந்திருக்கிறது. இமய மலையின் கிழக்குப் பகுதியில் பட்டாம்பூச்சிகள், பறவைகள், மான், தேனீக்கள், ஊர்வன போன்ற எண்ணற்ற உயிரினங்கள் உயரமான இடத்தை நோக்கி நகர்ந்துசென்றுவிட்டன. இதுபோல் 25 உயிரினங்கள் இடம்பெயர்ந்துவிட்டதாக சிக்கிமில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. புவிவெப்பமயமாதலின் மற்ற விளைவுகளாலும் இந்திய உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அவை: வெப்ப அழுத்தம், கடல் அமில மயமாதல், பூச்சிகளின் தாக்கு தல் மற்றும் வறட்சி. எனினும், உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியில் ஏற்பட்டிருக்கும் மாறுதல், இந்தப் பிரச்சி னையின் தாக்கத்தை, மற்ற எதையும் விட அழுத்தமாகச் சொல்கிறது.
அல்மோராவில் உள்ள ஜி.பி. பாண்ட் மையத்தில் உள்ள விஞ்ஞானிகள், ரோடோடென்ரான் (மலைப் பூவரசு) எனும் தாவரத்தின் மலர்ச்சிப் பருவம் தொடர்பாக 1893-ல் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர். இச்செடிகள் தற்போது 40 நாட்கள் முன்னதாகவே மலர்ந்துவிடுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த மாற்றத்துக்கும் வெப்ப நிலை உயர்வுக்கும் தொடர்பு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இமய மலைப் பகுதியில் உள்ள பல உயிரினங்களும் இதே போன்ற பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. கர்நாட காவின் கடற்கரை பகுதியில் உள்ள எனது கிராமத்தில் மாமரத்தின் மலர்ச்சி பருவம் இதேபோன்ற மாற்றத்துக் குட்பட்டிருப்பதை அறிய முடிகிறது. மணிப்பாலில் அத்தி, ஒடிஷாவில் சாரப் பருப்பு, கேரளாவில் காப்பிக்கொட்டை ஆகியவற்றிலும் இந்த மாற்றத்தை உணர முடிகிறது. சென்னை கடல் நீர் வெப்பமானதைத் தொடர்ந்து இரண்டு வகை மீன்கள், தாங்கள் முட்டையிடும் பருவத்தை அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு மாற்றிக் கொண்டுவிட்டன. மற்ற மாதங்கள் இன்னும் அதிகமாக வெப்பமடைந்திருக்கின்றன.
அறுந்துபோகும் தொடர்பு
வாழ்விடத்தை மாற்றிக்கொள்ளுதல் மற்றும் வளர்ச்சி சுழற்சிமுறையில் மாறுதல் போன்றவை பருவ நிலை மாற்றத்தின் காரணமாக அந்த உயிரினங்கள் கைக்கொண்டிருக்கும் மாற்றங்கள். இந்த உயிரினங்க ளால் இதைச் சமாளிக்க முடியுமா, இல்லையா என்பது மட்டுமல்ல விஷயம். தாவரங்களின் சுழற்சி முறை மாறும்போது உணவுக்காக அவற்றை நம்பியிருக் கும் மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சில உயிரினங்கள் இவ்வாறு தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும்போது உயிர்ச் சூழலில் உள்ள மற்ற உயிரினங்களும் இந்த மாற்றத்தில் இணைந்து கொள்வதில்லை. அத்துடன், பல்லாண்டுகளாகத் தொடரும் உயிரினங்களுக்கு இடையிலான தொடர்பு பாதிப்புக்குள்ளாகிறது. இயற்கையான தடைகளும் உண்டு. கடல் வெப்பம் அதிகரிக்கும் நிலையில், பாம்பே வாத்து என்றழைக்கப்படும் ஒரு வகை மீன் வடக்கில் எத்தனை தூரம் இடம்பெயர முடியும் என்று ஒரு நிபுணர் கேட்டார். ஏனெனில், இந்த மீன் வடக்கில் இடம்பெற முடியாத வகையில், குஜராத்தின் நிலப் பகுதிதான் அதன் வடக்கு எல்லையாக இருக்கிறது. ஐரோப்பாவில் புவி வெப்பமயமாதல் காரணமாக மலைப் பகுதிகளில் வாழும் தவளைகள் மற்றும் தேரைகள், மேலும் மேலே செல்ல வழியில்லாததால் அழிந்துபோன சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளும் இங்குள்ள உயிரினங்களின் அழிவு குறித்து பேசுகின்றன.
சுருக்கமாகச் சொல்வதானால், புவி வெப்பமயமாதல் தரும் இப்பிரச்சினை வெவ்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில், உடனடியாகச் செயலாற்ற வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. ஏற்கெனவே, சராசரி வெப்ப நிலையில் 0.9 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்து வருவது உள்ளிட்ட அழிவுகள் சுற்றுச்சூழலில் ஏற்பட்டு வரும் நிலையில், வெப்பநிலை மேலும் உயர்வது இந்தியாவின் கணக்கற்ற உயிரினங்களில் ஏற்படும் பாதிப்பு குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.
மனிதர்களைப் பொறுத்தவரை, மற்ற உயிரினங்களின் வாழிடம் மற்றும் அவற்றின் நலனைச் சார்ந்துதான் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை இருக்கிறது. மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் காரணமாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், மீனவ மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இன்னும் ஆழமான ஆய்வைக் கோருபவை. பருவநிலை மாறுதல் தொடர் பாக டிசம்பர் மாதம் பாரிஸில் நடக்கவிருக்கும் சி.ஓ.பி.21 மாநாட்டில், புவிவெப்பமயமாதலின் தாக்கத்தைச் சந்திக்கும் உயிரினங்கள் சொல்லும் சேதிக்கு, அரசியல் தலைவர்கள் செவிமடுப்பார்கள் என்று நம்பலாம். ஏனெனில், வாழ்க்கை என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு வலைப் பின்னல். ஆபத்தில் இருக்கும் உயிரினங்கள் நமக்குச் சொல்லும் செய்தியை அலட்சியம் செய்வது ஆபத்தானது!
- நாக்ராஜ் ஆத்வே,
‘இந்தியா கிளைமேட் ஜஸ்டிஸ்’ அமைப்பின் உறுப்பினர்.
‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: வெ. சந்திரமோகன்