TNTET தேர்வு நடைபெறாததால் அல்லல்படும் ஆசிரியர்கள்!
ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளால் பணி பாதுகாப்பு இல்லாமல் ( 23-08-2010 --- 15-11-2016 )சிக்கலில் தவித்துக் கொண்டுள்ள (பணியில் உள்ள) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு...
தமிழகத்தில் 23-08-2010 க்குப் பிறகு ஆசிரியர் தகுதி தேர்வு இல்லாது பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையிலும், அரசு சிறுபான்மையினர் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில் இதே பிரட்சனைகளில் மன உளைச்சலில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் நிலையை தமிழக அரசின் முழு கவனத்திற்கு எடுத்து செல்ல நாம் ஒன்று சேர வேண்டிய தருணம் இது.
நாம் தமிழக அரசிடம் நம் நிலையை எடுத்துக் கூறி நம் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவில் சென்னையில் கூடி முடிவு செய்ய தற்போதைய நிலைப்படி சுமார் 300 ஆசிரியர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளனர். இன்னும் சுமார் 3000 பேர் தமிழகத்தில் இப்பிரட்சனையுடன் பணி புரிந்து வருகின்றனர் என்ற தரவு தற்போது கிடைத்துள்ளது.
23-08-2010க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களே தயை கூர்ந்து இதுசார்ந்த தகவல்களுக்கு கீழ் வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
9962228284, 9655949077, 9524847173, 9843438004, 9791540176,
9488752473...9585667075
No comments:
Post a Comment